வியாழன், 25 பிப்ரவரி, 2016

மெய்ப்பொருள் காண்பது அறிவு.....

பறை சாற்றினாரா?............உண்மை நிலை என்ன?

முன்பெல்லாம்  ஒரு பள்ளிக்கூடம் , கல்லூரி போன்றவைகளின் வளர்ச்சிக்கு அல்லது கட்டிட வேலைகளுக்கு சொந்த நிதி வாய்ப்புக்கள் மூலமாகவே செலவுகள் செய்ய வேண்டிய நிலைமை இருந்து வந்தது.....

இந்தக்காலத்தில் அவ்வாறு சொந்த நிதி பலமோ,நன்கொடைகள் வசூலித்து ஆகவேண்டிய அவசியமோ இல்லை...

மத்திய மாநில அரசுகளே......கல்வி நிலையங்களுக்கு இவ்வாறான நிதி வசதிகளை தொகுதி மேம்பாட்டு நிதி என்கிற பெயரால் வழங்குகிறது.....

நாடாளு மன்ற சட்ட மன்ற உறுப்பினர்களை அணுகி விண்ணப்பித்தால் நிதி பெறலாம்....

மேலப்பாளையம் முஸ்லிம் கல்விக் கமிட்டியின் கோரிக்கையை ஏற்று ...பள்ளிக் கூட கட்டிட வளர்ச்சிக்கு ,தொடர்ந்து நிதியுதவி கிடைத்தது.கிடைத்தும் வருகிறது.

எங்கள் சார்பாக..பள்ளித் தாளாளர் முன்னாள் சேர்மன் எம்.ஏ.எஸ்.அபூபக்கர் சாகிப் தான் நிதி கேட்பார்கள் ...
அதனடிப்படையிலேயே
அ.இ.அ.தி.மு.க.எம்.பி...முத்துக்கருப்பன் எம்.பி.அவர்களும், பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி, மேம்பாட்டு நிதி கொடுத்தார்கள்..அதைக்கொண்டு பள்ளிக்காக கட்டிடங்கள் கட்டப்பட்டன....

அவரைப்போல தி.மு.க.நாடாளுமன்ற உறுப்பினர் சண்முக சுந்தரம் .....

நாடாளுமன்ற உறுப்பினர்கள்
காங்கிரஸ் எம்.பி.பீட்டர் அல்போன்ஸ்....
காங்கிரஸ்எம்.பி. தனுஷ்கோடி ஆதித்தன்.....
காங்கிரஸ்எம்.பி.. ராமசுப்பு.....

முஸ்லிம்லீக்கின் எம்.எல்.ஏ.கோதர் முகைதீன்....
தி.மு.க.வின் எம்.எல்.ஏ.முகைதீன் கான்,
ஆங்கிலேய இந்திய சட்டமன்ற எம்.எல்.ஏ.பிரதிநிதி நிக்லி....
முதலானோர் தத்தமது பதவிக்காலங்களில் நிதி தந்துள்ளார்கள்...

கடந்த வாரம் அ.இ.அ.தி.மு.க எம.பி.
விஜயா சத்தியானந்த் அவர்களும் நிதி வழங்கியுள்ளார்கள்....

மாண்புமிகு நாடாளு மன்ற ,சட்டமன்ற உறுப்பினர்கள் தமது தொகுதி மேம்பாட்டு நிதிகளைத்  தருவது ......பள்ளி நிர்வாகத்தின் வேண்டுகோளை ஏற்றுத்தான்....பள்ளிக்காக்.தாளாளர் முன்னாள் சேர்மன் எம்.ஏ.எஸ்.அபூபக்கர் சாகிப் அவர்களின் கோரிக்கையை ஏற்றுத்தான் தருகிறார்கள்...

வேறு தனிநபர்கள்....இன்னார் கேட்டுத்தான்.... நிதி வழங்கினேன் என்று யாரும் இதுவரை சொல்லவில்லை....என்பதை பதிவுகளில் இருந்து அறிய முடியலாம்....

"மகுடம்....களங்கம்.....மரண அடி "....விளக்கம் தருவார்களா?..
வரட்டும் .....தரட்டும் .....தந்தால்   தொடர் விளக்கங்கள் தொடர்ந்து வெளி வரும்....


அண்மைக்காலமாக எனக்குத்தெரிந்த....
என்னிடம் உள்ள தகவல்களைக் கொண்டு ஆய்வு செய்த .....அல்லது ஆதாரங்கள் நிறைய உள்ள பல்வேறு தகவல்களை எழுத்து வடிவில் கொண்டு வந்தாக வேண்டும் என்கிற ஒரு வகை உந்துதல் இருந்து கொண்டே இருக்கிறது...
என்னால் எழுதப்பட்ட பல்வேறு கட்டுரைகளை தொகுத்து புத்தகமாக்கிட வேண்டும் என்கிற முனைப்பும் மனதில் உண்டு..
நம்மைச்சுற்றி ......பொய்யே மூலதனமாக்கி பேசுவதில் கை தேர்ந்தவர்கள் செய்கிற பரப்புரைகள் பற்றி கேள்விப்படும்போது .....அல்லது சொல்லப்படும் போது மனது என்னவெல்லாமோ ஆகிறது....அவற்றிற்கெல்லாம் .உடனே பதில் எழுதுவது என்பது கோபத்தின் வெளிப்பாடு..... ஆகி விடக்கூடாது என்பதனால் பல ஆண்டுகளாக அவைகளைத் தவிர்த்தே வந்துள்ளேன்....பொறுமை காத்துள்ளேன்...
பெரிய மனிதர்கள் புடைசூழ ....உள்ள பல சபைகளில், நாகூசாமல் பொய் பேசுபவர்களைப் பார்த்து அறுவருப்படைந்துள்ளேன்....
அவர்களுக்கு அதனால் என்ன பலன்கள் கிடைத்துவிடப் போகிறது....?தட்டிக் கேட்க மாட்டார்களா?...என்று ஏங்கியுள்ளேன்.
சிலரை சிரிக்க வைக்க...... பலரை இழிவு செய்யும் கொடுமையை ....இன்னும் பல இடங்களில் ......உடன் இருந்து .....பார்த்து அங்கரித்தே வருகிறோம்....இதெல்லாம் தவறு என்று சுட்டிக்காட்டுபவர்கள் இருக்கிறார்களா?....என்று தேடுகின்றேன்.....
காலத்தின் கொடுமை...... அத்தகைய மனிதர்களின் பொய்யுரைகள்....”இருட்டுப்பக்கங்கள்” என்னிடம் பதிவுகளாக தானே வந்து கிடைத்ததுதான்.....அதனை ஒளி,ஒலி.....வடிவில் வெளியிட்டால் அவர்களால்....வெளியில் தலை காட்டமுடியாது....அது பலரையும் பாதிக்கும் என்பது .......எல்லோர்க்கும் புரிந்ததுதான்.
இன்றைய தலைமுறை......என்ன சொன்னாலும் நம்புகிற காலங்கள் மலையேறிப் போய் விட்டது...கேள்விகள் ஆயிரம் என்று அல்லாமல்...... அதையும் தாண்டி கேட்கிறார்கள்..அதுதான் கால சூழ்நிலை...
சரி.....இதற்கு மேலும் இழுத்துக் கொண்டுபோனால்....”என்னாச்சு?....இந்த ஆளுக்கு?”...என்கிற பகுதிக்குப் போய் விடுவார்கள்..
“மெய்ப்பொருள் காண்பதறிவு..” என்கிற பயணத்திற்கு,வரலாற்றுத்தேடலுக்கு வருகிறேன்....விரும்புவோர் என்னோடு....பயணிக்க வாருங்கள்...அல்லாதோர் விட்டுவிடுங்கள்.....
இறைவன் நன்கு அறிந்தவனாகவும் ஞானமிக்கவனாகவும் இருக்கிறான் என்பதில் .......நம்பிக்கை கொண்டு எழுதவிரும்புகிறேன்..........
கடந்த சில வருடங்களாக “கல்யாணப்பரிசு தங்கவேல் ஸ்டைலில்”...... வால்போஸ்ட்டர்கள் மூலம் மேலப்பாளையத்தில் தம் இருப்பைக்காட்டிக் கொள்வதில் சிலருக்கு என்னவோ ஒரு மோகம் ஆட்டுவித்துக் கொண்டே இருக்கிறது.......யாரும் இத்தகைய கேவலத்தைக் கண்டிப்பாதாயில்லை....அதை வாசித்துவிட்டு.....சிரித்து......தலையில் அடித்துவிட்டு..... கைகட்டி வேடிக்கைப் பார்க்கிறார்கள்...

பொதுவாக எல்லா ஊர்களிலும் கழுதைகள்....இன்றைய நாட்களில் சுவரொட்டிகளை தின்ன வருவதில்லை....மாடுகளுக்கு உணவாகிறது....பல இற்றுப்போன சுவர்களை அத்தகைய சுவரொட்டிகள் கீழே விழாமல் பாதுகாக்கின்றன......

ஆனால் அத்தகைய சுயவிளம்பரங்கள் தம்மை உயர்த்தி மற்றவர்களை தாழ்த்தி நிற்க வைக்க வேண்டும் என்கிற வெறியோடு இருந்தால்?....... ...பதில் சொல்லித்தான் ஆக வேண்டும் என்கிற நிலைமை வரத்தான் செய்யும்..
அதில் முதலாவது சொல்லப்போகிற பொருள்......
கடந்த சில நாட்களாக என்னுடைய முகநூலில்....உள் வட்டத்தில் வந்து நண்பர்கள் கேட்பது.... மேலப்பாளையத்தில் ஒட்டப்பட்ட ஒரு வால் போஸ்ட்டர் தொடர்பானதாகும்....
அதுபற்றி நள்ளிரவில் கூட தொலைபேசி மூலம் தாயகத்தில் இருந்தும்,.....பல்வேறு நாடுகளில் இருந்தும் தகவல்கள் கேட்கிறார்கள்...
எல்லோருக்கும் சொல்லப்போகும் பதில் தான்....இது....
மேலப்பாளையம் முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி என்பது 1941 ஆம் ஆண்டுஜூன் மாதம் 1 ஆம் தேதி முஸ்லிம் கல்விக்கமிட்டியால் துவக்கம் செய்யப்பட்டதாகும்....
முதலில் அதன் பெயர் முஸ்லிம் உயர்தர ஆரம்பப் பாடசாலை என்பதாகும்...
அந்தப்பள்ளியின் கல்விக்குழுவில் “கான் பகதூர்”,டி.எஸ்.எம்.ஒ. உதுமான் சாகிப், எல்.கே.எஸ்.முகம்மது மீரா முகைதீன் தரகனார், அப்துல்லா லெப்பை, பருத்தி சாகுல் ஹமீது தரகனார் ,பருத்தி ஹனீபா தரகனார்,சமாயினா யூசுப் லெப்பை,ஜமால் செய்யது முகம்மது ஆலிம்,மூழி கலந்தர் லெப்பை, கோணத்து அபூபக்கர், மோத்தை அப்துல்லா,புலவர் செய்யது அகமது , லேஸ் ஹவுஸ் புகாரி சாகிப்,வி.எஸ்.ஷேக் மன்சூர் உள்ளிட்டோர் இடம் பெற்று இருந்தார்கள்....
அவர்கள் தான் முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி உருவாக ஒன்று சேர்ந்து பணியாற்றினார்கள்.....
பள்ளியின் முதல் தாளாளராக மேலப்பாளையம் மைலக்காதர் தெரு வழக்கறிஞர் கே.எம்.எஸ்.ஹமீது சாகிப் அவர்களைத்தேர்ந்தெடுத்து....அவர்களுக்கு முழுமையான உரிமைகள் கொடுத்து பள்ளியை உருவாக்கினார்கள்...
இன்றுள்ள முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி,மற்றும் கோல்டன் ஜூப்ளி பள்ளியின் நிலங்கள், வள்ளல்கள் டி.எஸ்.எம்.ஒ.உதுமான் சாகிப்,எல்.கே.எஸ்.மீரா முகைதீன் தரகனார் ஆகிய இருவருக்கும் சொந்தமாயிருந்தது...
பள்ளி விளையாட்டுத்திடலின் பாதி இடம்....அதாவது வடபகுதி.....வாரிசுகள் இல்லாமல் இறந்து போன மேலப்பாளையம் நரவன் வகையறா குடும்பத்திற்கு சொந்தமான இடமாகும்...அன்றைய ஆங்கில அரசால் அந்நிலம் ஆர்ஜிதம் செய்யப்பட்டு...... பள்ளிக் கமிட்டிக்கு விலைக்கு வழங்கப்பட்ட நிலங்களாகும்.
அதே நிலத்திற்கு தென்புறமுள்ள இன்னொரு பாதியிடம் டி.எஸ்.எம்.ஒ.உதுமான் சாகிப் அவர்களுக்குச்சொந்தமாக இருந்ததாகும்....
இன்றைய மேலப்பாளையம் குறிச்சியில் ஆசாத் ரோட்டின் முதல் இடம் ...ஆறு தச்சு முழம் அகலம 84 அடி நீள இடம் லேஸ் ஹவுஸ் புகாரி ஹாஜியார் தந்ததாகும்.
பள்ளிக் கமிட்டி உறுப்பினர்களில் பெரும்பான்மையினர் பர்மா,கொழும்பு நாடுகளில் இருந்ததனால் .....அவர்களின் பரிபூரண அன்பை......நம்பிக்கையைப் பெற்ற வள்ளல் டி.எஸ்.எம்.ஒ.உதுமான் சாகிப் அவர்களிடமே பள்ளிக் கூடத்தைக் கட்டி எழுப்புகிற பொறுப்புக்களையும் பணிகளையும் கொடுத்தார்கள்...
“பள்ளிக்கூடம் கட்டுங்கள்.....பணத்திற்கு நாங்கள் பொறுப்பு....”...என்று வாக்குக் கொடுத்த நண்பர்களின் பணம் எதனையும் எதிர் பார்க்காமல் தமது சொந்தப் பணத்தைக் கொண்டு, வள்ளல் டி.எஸ்.எம்.ஒ.உதுமான் சாகிப் அவர்கள் பள்ளியின் இன்றைய தென் பகுதிக் கட்டிடத்தின் முதல் ஆறு வகுப்பறைகளை.....ஒட்டுக் கட்டிடமாக ...மிக உயரமாகக் கட்டினார்கள்..
வள்ளல் அவர்களின் பணிகளுக்கு பக்க பலமாக பள்ளியின் முதல் தாளாளர் வழக்கறிஞர் கோணத்து ஹமீது சாகிப் அவர்கள் தெருத்தெருவாகச் சென்று வீடு வீடாக ஏறி இறங்கி.....தம்பிடி....அணாக்கள்...துட்டு.....ரூபாய்... என்று, வசூலில் கிடைத்தது எல்லாம் வாங்கி....பள்ளிக் கட்டிடங்கள் எழும்ப உழைத்தார்கள்....உழைத்தார்கள் உழைத்துக் கொண்டே இருந்தார்கள்...
நெசவுத்தொழிலில் இருந்த மக்கள் பாவுக்கு, இத்தனை அணா என்று மகமை வைத்து பள்ளிக்கூடத்தை வளர்த்தார்கள்...
பர்மா....கொளும்பு வணிகத்தில் இருந்த  தரகனார்கள் தம்மால் முடிந்த நிதிகளைத் தந்தார்கள்...

பள்ளி உருவாகிட காரண மானது ஒரு தந்தி தான்....அதனை அடுத்த பதிவாகத் தொடர்வோம்...

(தொடரும்)

கருத்துகள் இல்லை: